twitter


காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்-
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை அவளின் நினைவுகள்! ! !


சாலையில் உள்ள மரங்களுக்கு
எல்லாம் இலையுதிர்காலம்
நீ வரும்போது...
உன்னை தொடுவதர்காகவே
உதிர்கின்றன...!


பெண்ணே !
நீயும் அழகானவள் தான்
நான் உன்னை தான் நிச்சயமாக காதலித்திருப்பேன்...
நீ உன் தோழியை அறிமுகபடுத்தாமல்
இருந்திருந்தால் !!!


ஏ நிலவே....!!!!!!!

நீ ஆயிரம் முறை
பிறந்து வந்தாலும்
தோற்றுத்தான் போவாய்
எனை தீண்டும் என் அவளின்
பார்வை பிரகாசத்துடன்
ஒப்பிடும் போது.......

ஏ மலரே....!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
விரலின் மென்மைக்கு
ஈடாகுமா உன் மென்மை....

ஏ தென்றலே...!!!!!!

எனை தீண்டும் என் அவளின்
மூச்சுக்காற்றின் குளுமைக்கு
ஈடாகுமா உன் குளிர்ச்சி....

ஏ அலைகடலே...!!!!!!

என் அவள் காட்டும் அன்பின்
ஆழத்தின் முன் நீ
மிக சாதாரணம் தான் எனக்கு...