undefined
என் கல்லறை மேல்
உன் பெயரை எழுதி வை !
நினைபதற்க்கு அல்ல
அங்கும் உன்னை
சுமப்பதற்காக !!!
இந்த வலைபதிவில் தமிழ் புதுக்கவிதைகள் , மரபுக்கவிதைகள் , காதல்,தத்துவ,நட்பு கவிதைகள் அடங்கியுள்ளது.
0
comments
Posted in
என் கல்லறை மேல்
உன் பெயரை எழுதி வை !
நினைபதற்க்கு அல்ல
அங்கும் உன்னை
சுமப்பதற்காக !!!
0
comments
Posted in
உன்னை கவிதை என்று
என்றோ வர்ணித்தேன்
அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது ...
உன்னிலும் பொய்கள்
0
comments
Posted in
எழுது எழுது
எனக்கு ஒரு கடிதம் எழுது
என்னை நேசிக்கிறாய் என்று ...
அல்ல நீ வேறு எவரையும்
நேசிக்க வில்லை
என்றாவது எழுது ...
0
comments
Posted in
உலகத்திலேயே சிறிய கவிதை
என்னவென்று கேட்டால்
தாய் என்பேன் .
அதையே
என் தாய் வந்து கேட்டால்
இன்னும் சிறிதாய் சொல்வேன்
நீ என்று ...
0
comments
Posted in
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னை காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்த பூ மட்டும்
நகர்ந்துகொண்டே இருக்கிறது ? என்று ...
0
comments
Posted in
உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?
உன் பேரழகுகளின்மேல் நிற்க முடியாமல்
சறுக்கி விழும் துப்பட்டாவை...
சரி செய்ய உன் கைகள் செல்லும் போது...
அழகுகளை பார்க்க வளையல்களுக்குள்
சண்டை போட்டுக்கொண்டு பெருமூச்சடைந்து சிணுங்குகிறது....
வளையலுக்கே இந்த கதி என்றால்..?
(நன்றி- சதீஷ் குமார் )
0
comments
Posted in
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய் நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்
கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா
நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன்
என் நண்பனே கரைகிறேன்
உன் நினைவிலே உன்னை இழக்கிறேன் என் நண்பனே!!!
(நன்றி - ஜீவிதா )
0
comments
Posted in
உறக்கம் பிடிக்கும்..
உள்ளே கனவாக நீ இருந்தால்..!!
உணவு பிடிக்கும்..
நீ உருட்டி ஊட்டி விட்டால்..!!
மயங்குவது பிடிக்கும்..
மயிலிறகாக உன் மடி கிடைத்தால்..!!
வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!
மரணம்கூட பிடிக்கும்..
கடைசி மூச்சு உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!
0
comments
Posted in
நீ
என் கனவுகளில்
தொடர்ந்து வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!
0
comments
Posted in
நாம் போகும் பாதை
மனல் பாதையாக இருக்க வேண்டும் என்று அசை படலாம்,
ஆனால் ஒரு முல் கூட இருக்க கூடாது
என்று அசை படுவது அசட்டு தனம்.
நல்ல் அனுபவம் கிடைக்கும் போது
பரவசம் படனும்,
மோசமான அனுபவம் கிடைக்கும் போது
பக்குவபடனும்
0
comments
Posted in
நீ
எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய இரக்கமில்லாத...கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..?
0
comments
Posted in
என் காதலி இறக்கவில்லை
அவள் தந்த காதல் தான்
இறந்து விட்டது !
நானும் ஒரு ஷாஜஹான் தான்
என் இதயமும் ஒரு தாஜ்மஹால் தான் .
0
comments
Posted in
நினைக்கும் பொருளில் எல்லாம்
உந்தன் நினைவுகள் தானடி;
உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்
உந்தன் பெயர் ஓசை தானடி ;
சுவாசிக்கும் காற்றில் எல்லாம்
உந்தன் வாசனை தானடி ;
நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்றாலும்
எனக்குள் ஏனடி இவ்வளவு போராட்டம்;
உன்னை அன்றி
நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாய் கழிகின்றன;
கண்களை மூடினால் கூட
இமைகளுக்கு நடுவில் நிற்கிறாய்;
என்ன செய்வது என்று தெரியாமல்
உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!
0
comments
Posted in
திடீரென்று விழித்து எழுந்தேன் !
என் வீட்டினுள் திருடன் நுழைந்தான் போல .
அபொழுது தான் நினைத்தேன் .
வீதியில் படுத்திருக்கும்
எனக்கு வீடு ஏதுமில்லை என்று
0
comments
Posted in
உடைந்து போன வளையல் ,
தவறி விழுந்த hair clip,
அவள் முகம் துடைத்த kerchif,
அறுந்து விழுந்த பாசிமணி ,
மை தீர்ந்த பேனா - என ,
அத்தனையும் இருக்கிறது
என்னிடம் ...
அவளை தவிர .
0
comments
Posted in
உனது புகைப்படம் ,
ஏன் என்னிடம் கிடைத்தது ?
கடவுள் போட்ட திட்டமா ,
என்னை பித்தனாக்க ?
0
comments
Posted in
நான் காதலிப்பது
யாருக்கும் தெரிய கூடாது
என்று நினைத்திருந்தேன் ,
கடைசியில்
அது அவளுக்கே
தெரியாமல் போய் விட்டது .
0
comments
Posted in
காதலில் விழுந்த காரணத்தால் ,
எத்தனை காயங்கள் ,
எத்தனை இளப்புகள் ,
உனக்காக வாழ்ந்ததில் ,
காணமல் போன என் வாழ்க்கையை ,
தயவு செய்து வந்து
பார்த்து விட்டு போ .
0
comments
Posted in
பெண்ணே,
உன் நய வஞ்ச காதல் ,
நசுக்கி போனது என்னை மட்டும் அல்ல :
நாளைய பற்றிய என் நம்பிக்கையும் தான் !
இன்னும் எத்தனை பேரை நாசமாக்க போகிறாய் ,
முடிய போகும் இளமையை வைத்து .
0
comments
Posted in
உன் தேர்வு முடியும் வரை
நோ சாட் நோ நெட்
என சட்டம் இயற்றினாய்
உன் முன்னோர்கள்
வெள்ளையர்களுடன் வேலைப்பார்த்தவர்களோ
உன் அடக்குமுறைச் சட்டங்கள்
ரவுலட் சட்டத்தைவிட
மிகக் கொடியவை
***************************************************
யார் யாரிடமோ
நம்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்
நீயும் நானும் பேசிக் கொள்வோமே
இவர்களின் நலன் கருதி..
****************************************************
உன்னை வந்து கேட்க ஆசை
உனக்காக காத்திருக்கும் நேரங்களில்
நீ வர தாமதமாகும் காரணங்களை
நீ தாமதமாக வரும் முன்பே
*****************************************************
படவா.. புரிஞ்சிக்கோடா...
என் தங்கம்..
இந்த வார்த்தைகள் மட்டும்
தமிழில் இல்லையென்றால்
உன்னிடம் என் ஸ்டிரைக்'கை
வாபஸ் வாங்கமாட்டேன்...
*****************************************************
0
comments
Posted in
காதலுக்கு தாஜ்மகால் கட்ட முடியாவிட்டாலும்!
கவிதையில் நிரந்திர குடியிருப்பு வாங்கிதருவேன்.
தங்க நகைகள் வாங்க முடியவிட்டாலும்!
மங்காமல் என் கவிதையில் இருப்பாய்.
வைரம் வாங்கி தரமுடியா விட்டாலும்!
ஜொலிப்பாய் கவிதையில்
இறப்பு இல்லாத வாழ்க்கை வாங்கி கொடுப்பேன்!
கவிதை இறக்கும் வரையில்
நீ இருப்பாய் நாயகியாக
0
comments
Posted in
எழுத்தில் மட்டும்
செயலில் இல்லை
"வாய்மையே வெல்லும் "
கடவுளை நம்பினோர்
கைவிடபடார்
"சபரிமலையாத்திரை விபத்து "
கீர்த்தியால் பசி தீருமா ?
ராமர் கோவிலால்
ஏழைக்கு விடியுமா ?
(நன்றி -இரா ரவி )
250
comments
Posted in
குடல் பசியை போக்கிட
உடல் விலை போகிறது
விபச்சாரம்
மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரன் ...
சுவரில் எழுதாதே !
சுவர் முழுவதும்
எழுதிருந்தது ...
அப்பாவும் மகனும்
ஒரே வரிசையில்
வேலைவாய்ப்பு அலுவலகம்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
(நன்றி இரா ரவி )
0
comments
Posted in
அவர்கள்
வெளியேறுவதற்காக வந்தவர்கள்
உள்ளே வந்து உங்களை வெளியேற்றியவர்கள்
அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்
அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய்
உங்களை
மொய்க்க வைப்பவர்கள்
அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும் போது தூக்கத்தைத் திருடுபவர்கள் தூங்கும் போது
கனவுகளைக் களவாடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பயண திசைகளைமாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால் ஓடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பசியை உண்பவர்கள்
அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள் விளையாடிவிட்டு
பின் உடைத்துப் போடுபவர்கள்
அவர்கள் உங்கள் ஏமாற்றத்தின் விந்தில் உற்பத்தியாகிறவர்கள்
அவர்கள் உங்களில் இருப்பவர்கள்
ஆனால்
நீங்கள் அவர்களில் இருப்பதில்லை
(நன்றி - ராஜா சந்திரசேகர் )
0
comments
Posted in
ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்
ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்
ஆண் தன் தோரணை கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்
ஆண் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்
உன்னுடனான காமம் சலித்துவிட்டது என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது என்றாள் பெண்
மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்
பாழடையத்துவங்கிய
வீட்டின்அலமாரியில் இருக்கின்றன
ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த ஆணின் பொம்மையும்
முத்தமிட்டபடி.( இந்த கவிதை இதழ்கள் வலைபக்கதிலிருந்து எடுக்கப்பட்டது )
0
comments
Posted in
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன
வெள்ளைப் பறவைகள் கல்லெடுத்துத் தண்ணீர் குழிகள் பறித்துக்கொண்டிருந்தவன் மேல்
எச்சம் கழித்து பறந்தது இன்னுமொன்று.
ஏதோ அதனாலியன்றது.
0
comments
Posted in
உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன பூக்கள் …
அது போல தான்…
உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியாய் உயிர் விடுவேன்
நானும் …
0
comments
Posted in
நான்
ஆயுள் கைதி
ஆகிறேன் !!!
உன் ஆடைக்குள்
என்னை
சிறை வைப்பாய் என்றால் !!!
1 comments
Posted in
வரமாய் நீ
கிடைக்கும் வரை
என் வாலிப தவம்
கலையாது !!!
நதியை நீ
பாயும் வரை
என் இளமை ஆணை
நிறையாது !!!
அமுதமாய் நீ
வழியும் வரை
என் இதய கோப்பை
நிறையாது !!!
வசந்தமாய் நீ
வரும் வரை
என் வழக்கை வாசல்
மூடாது !!!
0
comments
Posted in
சொல்லி விட
எண்ணி பல நாள்
அருகில் வருவேன் …
உந்தன் பார்வை பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து விலகி விடுவேன் …
என் மனதில் உள்ளது
தெரிந்தும் விளையாடும் பாவையிய
நீ ஏற்று கொள்வாய்
என்றே தொடர்கிறேன்
உன் நிழலை
தொடர்வேன் என்றும் …
0
comments
Posted in
நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும் !
உண்மையான ‘ அன்பு ’
உயிர் உள்ளவரை துணைக்கு வரும் !
0
comments
Posted in
அறிமுக படுத்தினேன்
என் முதல் காதலியை ;
இவள் என் கல்லூரி சிநேகிதி என்று
வந்தது பிறகு ஞாபகம் ,
அன்று என் மனைவி அறிமுகபடுத்திய
அவள் சிநேகிதன் .
0
comments
Posted in
அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது
காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...
0
comments
Posted in
மலையை " பார்த்து "
மலைத்து விடாதே ,
மலை மீது ஏறினால்
அதுவும்
"கால் அடியில் ".
0
comments
Posted in
என்
அதிகாலை தூக்கத்தை
கெடுத்தவனை
கொன்று விட்டேன் .
கொசுவை கொன்ற
குழந்தையின் வாக்குமூலம்
0
comments
Posted in
அவளை பார்க்கும்போது
சொல்ல நினைக்கிறேன் …
அவள் சிரிக்கும்போது
சொல்ல நினைக்கிறேன் …
அவள் என்னை முத்தம் இடும்போது
சொல்ல நினைக்கிறேன் …
ஆனால் சொல்ல
முடியவில்லை !!!
கடவுளே …
எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு …
அவளை “அம்மா ”
என்றழைக்க …
0
comments
Posted in
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு ....
0
comments
Posted in
பகுமுறையில் புதிய வடிவம் !
பத்துவரிசையில் அவள்
போட்ட கலர் கோலம் !!
அதிகாலைப் ப்ரார்த்தனை !
அவள் போட்ட கோலங்கள்
அழியவே கூடாதென்று !!
உன்னால் இன்று நான்
நூலகத்தில் கோலப்புத்தகங்கள்
தேடுகின்றேன் !!
0
comments
Posted in
நினைத்ததெல்லாம் நடந்தபோது
நிஜமாய் வருந்தினேன் !
நல்லதை மட்டும் நினைக்கலானேன் !!
நிலவு வளர்ந்து
மறுபடியும் தேய்ந்து போனது !
இரு நிலவுகள் கூடாதென்று !!
0
comments
Posted in
இங்கே வெய்யிலும் மழையும்
சேர்ந்து அடிக்கிறது.
உண்மையைச் சொல் கண்ணே !
அங்கு நீ என்னை
செல்லமாய் கடிந்துகொண்டு,
உடனே சிரித்துவிட்டாய் தானே ??
0
comments
Posted in
இரு கண்களாய் பார்க்காமல்
ஒரு கண்ணாய்
இரு கால்களாய் நடக்காமல்
ஒரு காலாய்,
இரு மனதாய் இல்லாமல்
ஒரு மனதாய்
இடைவிடாமல் இறுதி வரையிலுமாய்
வாழ்வதுவே காதல் !!
தொலைவில் இருந்தாலும்
அருகில்,
தொலைந்து போனாலும்
நினைவில்,
தொல்லை தந்தாலும்
கண்களில்,
தொடர்ந்து வாழ்வதுவே
காதல் !!
காலங்கள் மாறினாலும்
நிலையாய்,
காதல் செய்யும் விதம் மாறினாலும்
உறுதியாய்,
காட்டில் உடல் எரியும்போதும்
நெருப்பாய்,
காலம் வணங்க வாழ்வதுவே
காதல் !!
0
comments
Posted in
கம்பன் ஏமாந்தார் !
கண்ணதாசன் கண்டுபிடித்தார் !
பாரதி புதுமை என்றார் !
வாலி கங்கை என்றார் !
வைரமுத்து அதிசயம் என்றார் !
பெண்களுக்கு பல அர்த்தங்கள் !
ஆண்கள் எல்லாரும் கம்பர்கள் !!!
0
comments
Posted in
உன் கண்கள் கருப்பு வெள்ளை !
என் கனவுகள் கலர்கலராய் !!
கண்ணே, உன்னால் தானே ?!
அடைமழை பெய்து ஓய்ந்தும்
நிற்காமல் சொட்டும் துளிகள்
ஓட்டை குடிசை வீடு !!
என் வீட்டுத் தகர ஜன்னல்
வெள்ளியாய் மின்னியது !
எதிர் வீட்டு ஜன்னலில் அவள் !!
0
comments
Posted in
நமது கண்ணோடு கண் நோக்கின்
நமக்கு வாய்ச் சொல் எதற்கு?
உன் பெற்றோரின் வசைச் சொல்லும் எதற்கு?
ஊரெங்கும் மழை
தெருவெங்கும் வெள்ளம்
குடிப்பதென்னவோ பிஸ்லேரி
திரையரங்கின் வெளியே மழை
உள்ளே திரையிலும் ஒரே மழை
ஓடிக்கொண்டிருக்கிறது பழைய படம்
பேருந்து நிலையத்தில்
மறைந்தது மலர்த் தோட்டம்
--மகளிர் பேருந்து சென்றவுடன்
பெண்கள் முன்னால்
குனிந்த தலை நிமிர மாட்டான்
-- குட்டை பாவாடையில் பெண்கள்
வேலையில்லாமல்
உட்கார்ந்து சாப்பிட்டதில்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது-போலீஸாக
வெள்ளம்- தமிழ்நாட்டில் பெருமழை பெய்தால்
வெள்ளம்-கேரளாவில் சிறுமழை தூறினாலே
0
comments
Posted in
கண்ணாடி மனசு
குழந்தையின் உண்டியல் உடைவதற்கு முன் உடைந்து போனது....கண்ணாடி மனசு
குடும்பபாரம்
பளு தூக்கும் வீரனால்சுமக்கமுடியவில்லை.......குடும்பபாரம்
முதலிரவில்
பல இரவு விழித்திருந்தவன்உறங்கிவிட்டான்....முதலிரவில்
பாசமழை
கடும் கோடையிலும்அம்மா எப்படி பொழிகிறாள்....பாசமழை
காற்றாக மாறி..
காற்றாக மாறி என் சுவாசத்தில் கலந்தாய்
பின் கண்ணீராய் மாறி ஏன் என்னை பிரிந்தாய்..
மனதில் உள்ள சஞ்சலம்
உன்னை மறக்க தான் நினைக்கிறேன்
ஆனால் உன் நினைவால் ஏற்படும் மகிழ்ச்சியை ரசிக்கிறேன்...
இது என்ன சஞ்சலம்?
இது காதலா இல்லை....
வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது
உன் நினைவோ என் நெஞ்சை கொல்கிறது
எழுத்துக்கள் என்னை கை விட்டது
நான் நினைத்ததை நான் எவ்வாறு சொல்வது
இது காதலா? நான் காண்பது கனவா?
இல்லை. இது கானல்.
நான் இருப்பதோ நேர்காணலில்...
கவிதைகள்..கிறுக்கல்கள்..
கருத்துள்ள சிந்தனைகள் கிறுக்கல்கள் ஆகின்றன
கருதாமல் கிருக்குவதோ கவிதைகள் ஆகின்றன...
0
comments
Posted in
இலங்கையில் புதையல் ..
தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ...
காட்டுக்குள் கடுமையான போர் ...
பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை
அவைகள்தமிழ் பேசவில்லை ...
0
comments
Posted in
நேற்று
நீயும் நானுமாக
தீட்டிய ஓவியம்
இன்று
எங்கிருப்பது என்பது
தெரியாது தள்ளாட
நாமோ
தனித்தனியாக சித்திரம்
வரைந்து
சரித்திரம் படைக்கும்
ஆராய்ச்சியில்
0
comments
Posted in
அன்று நம் காதலுக்கு
3 வயது!
பரிசாய் எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!
உரையாடிய இதழ்கள் உறவாட ஆரம்பித்தன!
போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?
கடற்கரை
மணலில்என்
பாதச்சுவடுகளில்நீ கால் பதித்தபடி வந்தாய்.
இடையில் நீ நின்று விட
கால் வலிக்குதா' என்றேன்..
இல்லை இல்லை..
காதலிக்கிறேன் என்றாய்.
நினைவிருக்கிறதா ?
உனைப் பார்க்க
பேருந்து நிறுத்தத்தில் நான்!
ஐயோ..
தோழிகள் எல்லாம் இருக்காங்க..
பார்த்துடப் போறாங்க ...
போ போ என்றாய்' பதற்றத்துடன் !
நான்
செல்கையில்நீயும்
என் பின்னாலேயே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்...
நினைவிருக்கிறதா?
0
comments
Posted in
என் சவ ஊர்வலத்திற்கு
என்னவளும் வரக்கூடும்
வழியெங்கும் பூக்களை தூவிவிடுங்கள்
அவள் பாதம் நோகாமல் இருக்க.
0
comments
Posted in
இரும்பை ஈர்க்கும் காந்தத்தை போல்
என்னை உன்னிடம் ஈர்க்கிறாய்
என் அருகில் இருக்கும் நேரமெல்லம்
உன் அன்பை என் மீது பொழிகிறாய்
ஓரக்கண் பார்வையினால்
என் உயிரை தீண்டிச் செல்கிறாய்
ஞானக்கண் இருப்பது போல்
என் நினைவரிந்து நடக்கிறாய்
கண் தூங்கும் நேரத்தில்
கனவில் வந்து கொய்கிறாய்
உறங்காமல் நான் இருந்தால்
உன் உறக்கம் துறக்கிறாய்
என் கண்கள் கலங்கும் முன்
நீ கண்ணீர் சுறக்கிராய்
நான் விடுக்கும் புன்சிரிப்பில்
உன் உலகம் மறக்கிறாய்
நாள் தோறும் என் நினைவை
உன் நெஞ்சில் சுமக்கிறாய்
நான் செல்லும் பாதையினில்
என் கை கோர்த்து வருகிறாய்
என் உயிரோடு ஒன்றினைந்து உறவாடும் தேவதையே
என் செய்வேன் நான் உனக்கு
அதை கூறு நீ எனக்கு
0
comments
Posted in
என் குருதியின் நிறமும் சிவப்புதான் என்பதை
உன் தோட்டாவினால் தெரிந்து கொள்ள வெண்டுமா?
மண்ணில் மனிதனால் வரையபட்டிருக்கும் கோட்டை மாற்ற
மனித உயிர்தனை போக்க வேண்டுமா?
வெறும் வார்த்தையினால் தீர்க்ககூடிய பிரச்சனைக்கு
தீவிரவாதம் தான் தீர்வாகுமா?
0
comments
Posted in
ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும் நான் உன்னோடு
உன் மௌனத்தையும் நன்றறிந்து பேசவேண்டும் உன் கண்ணோடு
உன் சோகம் சுகம் தனை நீ பகிர வேண்டும் என்னோடு
சொல்லல் நீ வதைத்தால் நான் சென்று விடுவேன் மண்ணோடு...
0
comments
Posted in
உன்னை நினைத்து கவிதைகள் படித்தேன்
உன் ஆசைகள் அனைத்தயும் நிறைவெற்ற துடித்தேன்
உன் சிரிப்பை கான பல கதைகள் உரைத்தேன்
உனக்காக சில பாடல்கள் இசைத்தேன்
உன்னோடு பெச என் உறக்கம் துறந்தேன்
உன் முகம் கானும் சிறு நொடிகளை நேசித்தேன்
நீ நினைப்பதை கூட நிஜமாக்க முயற்ந்தேன்
உன்னை மகிழ்விக்கும் பொருட்டு என்னை நான் தொலைத்தேன்
0
comments
Posted in
உன் மனதை கட்டுபடுத்த முடியாத நீ
பிற மனிதரை கட்டுபடுத்த நினைப்பது
உன் தவரை சற்றும் உணராத நீ
பிறர் தவரை சுட்டி காட்டுவது
உன் கோவம் என்றும் குறைக்காத நீ
பிறர் மனம் கோனும் போல் உரைப்பது
உன் எண்ணம் தனை உயர்த்தாத நீ
பிறரை ஏளனம் செய்து சிரிப்பது
0
comments
Posted in
சிந்தனை செய் மானிடா.....
தாயின் கருனையினால் தரணியிலே பிறந்தோம்
குழந்தை பருவத்தில் தரயினிலே தவழ்ந்தோம்
பள்ளி பருவத்தில் புத்தகங்கள் சுமந்தோம்
இளமை பருவத்தில் காதலிலே விழுந்தோம்
பின்பு பணம், பொருள், புகழ் சேர்க்க அலைந்தோம்
நாம் பிறந்ததின் நோக்கதை மறந்தோம்
இந்த தேடலில் வாழ்க்கையை தொலத்தோம்
இறுதியில் வயது மூர்ந்து நோய் வாய்ப்பட்டு இறந்தோம்
பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்றில்லாமல்
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இரு
இறந்த பின்பும் நம்மை சுமக்கும் இந்த பூமிக்கு
இருக்கும் பொழுது நாம் என்ன செய்தோம்?
சிந்தனை செய் மானிடா.....
கண்களே...பதில்சொல்
உன் வாயிலாக என்னுள் நுழைந்தாள்
பின்பு உனக்கும் தெரியாமல் என்னை துறந்தாள்
நீ சிந்தும் கண்ணீர் துளிகள் எதனால்?
அவள் பிரிவினாலா?
இல்லை குற்ற உணர்ச்சியினாலா?
0
comments
Posted in
தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள்!
0
comments
Posted in
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று !
கண்டும்
கானாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய் பிடிக்க !
0
comments
Posted in
காதலுக்கு
கண்ணில்லை!
ஆம்..
இருந்திருந்தால்
உன்னை கண்டு
காதலித்திருக்கும்!
0
comments
Posted in
அவள் வீட்டு வாசலில்,
என்னை கோலமாக இடச்சொல்லுங்கள்!
என்மீது அவள் பார்வை தான் படவில்லை
பாதங்கலாவது பதியட்டும்...!
0
comments
Posted in
நாம் வாழுகின்ற
இந்த வாழ்க்கையில்...
காதலும், நட்பும் இரு கவிதைகள்
அதில் அன்பான காதலை நேசிப்போம்...
அழகான நட்பை சுவாசிப்போம் .
0
comments
Posted in
அன்பேகண்ணதாசன்
உன்னை கண்டதுண்டா?
இல்லை
என்று பொய் சொல்லி விடாதே?
உன்னை
காணமல் அவரால்
எப்படி
பெண்களின் எழிலோவித்தை இவ்வளவு எளிமையாக
எழுதமுடியும் ...
0
comments
Posted in
கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாதிருக்க!
ஒரு சிலை மட்டும் நகரக்கண்டேன்
“என்னவள்” கோவிலை சுற்றி வரும் பொழுது.
0
comments
Posted in
என்னை
தொலைத்துவிட்டேன் !
அது உன்னிடம் தான்
இருக்க வேண்டும்
கொஞ்சம் தேடி பார்த்து
சொல்லேன்!