twitter


நினைக்கும் பொருளில் எல்லாம்

உந்தன் நினைவுகள் தானடி;

உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடி ;

சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடி ;

நீ என்னுடன் தான் இருக்கிறாய் என்றாலும்

எனக்குள் ஏனடி இவ்வளவு போராட்டம்;

உன்னை அன்றி

நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாய் கழிகின்றன;

கண்களை மூடினால் கூட

இமைகளுக்கு நடுவில் நிற்கிறாய்;

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!

0 comments:

Post a Comment